ஹதீஸ்கள்
#555
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் அடுத்தடுத்து (சுழற்சி முறையில்) உங்களிடையே வருகின்றனர்; ஃபஜ்ர் தொழுகை யிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்றுகூடுகின்றனர். பிறகு, உங்களிடையே இரவில் தங்கியவர்கள் (வானத்துக்கு) ஏறிச் செல்கின்றனர். அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அ(வ் வான)வர் களிடம், “(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அ(வ்வான)வர்கள், “அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுதுகொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப்பார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال حدثنا مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " يتعاقبون فيكم ملايكة بالليل وملايكة بالنهار، ويجتمعون في صلاة الفجر وصلاة العصر، ثم يعرج الذين باتوا فيكم، فيسالهم وهو اعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون، واتيناهم وهم يصلون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #555
- Book Index
- 32
Grades
- -
