ஹதீஸ்கள்
#554
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு பௌர்ணமி இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்துகொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, “இந்த நிலாவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பதைப் போன்று உங்கள் இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழு கையிலும், சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் (ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் இயலுமானால், அவ்வாறே செய்யுங்கள் (இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று கூறிவிட்டு, “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்” (50:39) எனும் இறைவசனத்தை ஓதினார்கள். (இதற்கு விளக்கமளிக்கையில்) இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்மா யீல் பின் அபீகா-த் (ரஹ்) அவர்கள், “(இந்தத் தொழுகைகளை) நீங்கள் தவறா மல் தொழுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا الحميدي، قال حدثنا مروان بن معاوية، قال حدثنا اسماعيل، عن قيس، عن جرير، قال كنا عند النبي صلى الله عليه وسلم فنظر الى القمر ليلة يعني البدر فقال " انكم سترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رويته، فان استطعتم ان لا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا ". ثم قرا {وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب}. قال اسماعيل افعلوا لا تفوتنكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #554
- Book Index
- 31
Grades
- -
