ஹதீஸ்கள்
#539
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்), லுஹ்ர் தொழுகைக்காக பாங்கு சொல்ல முற்பட்டபோது, (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். பிறகு (சிறிது நேரம் கழித்து) மீண்டும் அவர் ‘பாங்கு’ சொல்ல முற்பட்டபோது அவரிடம், “வெப்பம் தணியட்டும்” என்று மணல் மேடுகளிலி ருந்து நிழல் படிவதை நாங்கள் பார்க்கும் வரை (இவ்வாறு) கூறினார்கள். பிறகு, “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது. எனவே, வெப்பம் கடுமையாகும்போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள்” என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘நிழல் படிதல்’ (‘தத்தஃபய்யஉ’) என்றால், ‘நிழல் சாய்தல்’ (தத்தமய்யலு) என்று பொருள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #539
- Book Index
- 16
Grades
- -