ஹதீஸ்கள்
#535
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை நாங்கள் பயணத்தில் இருந்தோம். அப்போது) நபி (ஸல்) அவர்களின் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின் பிலால் (ரலி) அவர்கள்) லுஹ்ர் தொழுகைக்கு ‘பாங்கு’ சொல்ல முற்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘வெப்பம் தணியட்டும்; வெப்பம் தணியட் டும்’ அல்லது ‘பொறுப்பீராக; பொறுப்பீராக’ என்று கூறிவிட்டு, “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டா கிறது. வெப்பம் கடுமையாகும்போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள்” என்று கூறினார்கள். (எனவே நாங்கள் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தினோம்). எந்த அளவுக்கென்றால் மணல் மேடுகளிலிருந்து நிழல் படிவதை நாங்கள் பார்த்தோம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #535
- Book Index
- 13
Grades
- -