ஹதீஸ்கள்
#505
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத், பிலால், கஅபாவின் பொறுப்பாளரான உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார்கள். (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். வெளியே வந்(துகொண்டிருந்)த பிலால் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (உள்ளே) என்ன செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “ஒரு தூணைத் தமக்கு இடப் பக்கமும் மற்றொரு தூணைத் தமக்கு வலப் பக்கமும் மூன்று தூண்களைத் தமக்குப் பின்புறமும் இருக்குமாறு செய்(து, தொழு)தார்கள்” என்று கூறினார்கள். அன்று இறையில்லம் கஅபாவினுள் ஆறு தூண்கள் இருந்தன. (அபூஅப்தில்லாஹ் புகாரீ ஆகிய நான் கூறுகின்றேன்:) (இதன் அறிவிப்பாளர்களின் ஒருவ ரான) மா-க் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் “தமது வலப் பக்கம் இரண்டு தூண்கள் (இருக்குமாறு தொழுதார்கள்)” என்று இடம்பெற்றுள்ளதாக எம்மிடம் இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.60 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر، ان رسول الله صلى الله عليه وسلم دخل الكعبة واسامة بن زيد وبلال وعثمان بن طلحة الحجبي فاغلقها عليه ومكث فيها، فسالت بلالا حين خرج ما صنع النبي صلى الله عليه وسلم قال جعل عمودا عن يساره، وعمودا عن يمينه، وثلاثة اعمدة وراءه، وكان البيت يوميذ على ستة اعمدة، ثم صلى. وقال لنا اسماعيل حدثني مالك وقال عمودين عن يمينه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #505
- Book Index
- 152
Grades
- -
