ஹதீஸ்கள்
#504
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றி நாளில்) நபி (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி), பிலால் (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக் குள் நுழைந்தனர். நீண்ட நேரம் உள்ளே இருந்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். (வெளியே வந்த வுடன்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முதல் ஆளாக நானே கஅபா வினுள் நுழைந்தேன். பிலால் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (கஅபாவுக்குள்) எங்கே (எந்த இடத்தில்) தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், ‘முன்னால் உள்ள இரண்டு தூண் களுக்கு இடையில்’ என்று பதிலளித் தார்கள் அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا جويرية، عن نافع، عن ابن عمر، قال دخل النبي صلى الله عليه وسلم البيت واسامة بن زيد وعثمان بن طلحة وبلال، فاطال ثم خرج، وكنت اول الناس دخل على اثره فسالت بلالا اين صلى قال بين العمودين المقدمين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #504
- Book Index
- 151
Grades
- -
