ஹதீஸ்கள்
#502
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (அபூமுஸ்-ம்) சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு) செல்வது வழக்கம். சலமா (ரலி) அவர்கள் குர்ஆன் பிரதிகள் (வைக்கப்படும் இடத்திற்கு) அருகிலுள்ள தூணருகே தொழுவார்கள். ஆகவே நான், “அபூமுஸ்-ம்! தாங்கள் இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்துத் தொழுவதையே காண்கி றேனே (என்ன காரணம்)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்து (அதை முன்னோக்கி நின்று) தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். (ஆகவேதான், நானும் இதைத் தேர்ந்தெடுத்துத் தொழுகி றேன்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، قال حدثنا يزيد بن ابي عبيد، قال كنت اتي مع سلمة بن الاكوع فيصلي عند الاسطوانة التي عند المصحف. فقلت يا ابا مسلم اراك تتحرى الصلاة عند هذه الاسطوانة. قال فاني رايت النبي صلى الله عليه وسلم يتحرى الصلاة عندها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #502
- Book Index
- 149
Grades
- -
