ஹதீஸ்கள்
#491
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் (மதீனாவி-ருந்து) மக்கா செல்லும்போது ‘தூத்துவா’ என்ற இடத்தில் இரவு நேரம் தங்கிவிட்டு, அங்கேயே காலையில் சுப்ஹு தொழுகையைத் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடம் அங்குள்ள கெட்டியான மேட்டின் மீது அமைந் துள்ளது. அங்கு (தற்போது) பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் (நபி (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடமன்று; அந்தப் பள்ளிவாசலுக்குக் கீழ்ப்புறமாக அமைந்துள்ள கெட்டியான மேடே (நபி (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடமாகும்” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அத்தியாயம் :
وان عبد الله بن عمر حدثه ان النبي صلى الله عليه وسلم كان ينزل بذي طوى ويبيت حتى يصبح، يصلي الصبح حين يقدم مكة، ومصلى رسول الله صلى الله عليه وسلم ذلك على اكمة غليظة، ليس في المسجد الذي بني ثم، ولكن اسفل من ذلك على اكمة غليظة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #491
- Book Index
- 138
Grades
- -
