ஹதீஸ்கள்
#489
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஷாம் செல்லும்) சாலையின் இடப் புறம் ‘ஹர்ஷா’ எனும் மலைக்கு அருகில் ஓடும் நீரோடையை ஒட்டியுள்ள மரங்களுக்குக் கீழே இறங்கித் தங்கினார்கள். அந்த நீரோடை ‘ஹர்ஷா’ எனும் மலையின் அடிவாரத்தை ஒட்டிச் செல்கிறது. (நபி (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடத்திற்கும் சாலைக்கும் மத்தியில் கிட்டத்தட்ட அம்பெய்தால் சென்றடையும் தொலைவே இருந்தது. அங்கிருந்த மரங்களில் சாலைக்கு மிக நெருங்கியதும் மிக நெடியதுமான ஒரு மரத்திற்குப் பக்கத்தில் தொழுவது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் வழக்கம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #489
- Book Index
- 136
Grades
- -