ஹதீஸ்கள்
#488
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நீ (மதீனாவி-ருந்து) ‘ஹள்பா’ எனும் மலைக்குச் செல்லும் வழியில் ‘அர்ஜ்’ எனும் சிற்றூருக்குப் பின்புறத்திலுள்ள (மேலிருந்து பாயும்) நீரோடையின் ஓரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அந்தத் தொழுமிடத்திற்கு அருகில் இரண்டோ மூன்றோ மண்ணறைகள் (கப்று) இருந்தன. அவற்றின்மேல் கற்பாறைகள் இருந்தன. அந்தப் பள்ளிவாசல் சாலையின் வலப் புறம் அமைந்திருந்தது. அந்தச் சாலையின் ஓரங்களில் மரங்கள் இருந்தன” என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அந்த மரங்களுக்கு நடுவே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நண்பகலில் சூரியன் உச்சி சாய்ந்ததும் ‘அர்ஜ்’ எனும் சிற்றூரிலிருந்து புறப்பட்டு அந்தப் பள்ளிவாசலில் லுஹ்ர் தொழுவார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #488
- Book Index
- 135
Grades
- -