ஹதீஸ்கள்
#484
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ராவுக்காக (மக்கா செல்லும்போது) ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்தில் உள்ள கருவேல மரமொன்றுக்குக் கீழே ‘துல்ஹுலைஃபா’ பள்ளிவாசல் (இன்று) அமைந்துள்ள இடத்தில் இறங்கி இளைப்பாறுவார்கள். தமது (‘விடைபெறும்’) ஹஜ்ஜுக்காகச் சென்றபோதும் (இங்கு) இறங்கி இளைப்பாறினார்கள். அறப்போரோ அல்லது ஹஜ்ஜோ அல்லது உம்ராவோ செய்துவிட்டு அந்தப் பாதையில் திரும்பிவ(ர நேர்)ந்தால் ‘பத்னுல் வாதீ’ (அகீக்) பள்ளத்தாக்கு வழியாக இறங்குவார்கள். ‘பத்னுல் வாதீ’ பள்ளத் தாக்கைத் தாண்டியதும் அதன் கிழக்குக் கரையிலுள்ள விசாலமான ஓடையில் தமது ஒட்டகத்தைப் படுக்கவைத்து அதிகாலை யாகும்வரை ஓய்வெடுப்பார்கள். அந்த இடம், கற்களாலான இந்தப் பள்ளிவாச-ன் அருகிலுமில்லை; பள்ளி வாசல் அமைந்துள்ள மேட்டிலுமில்லை. அங்கு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அதன் அருகில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவார்கள். அதன் நடுவே மணற்குவியல் இருந்தது. அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) விசாலமான அந்த ஓடையில் இருந்த அந்த இடத்தில் வெள்ளம் புகுந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதுவந்த அந்த இடத்தைப் புதையுறச் செய்துவிட்டது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #484
- Book Index
- 131
Grades
- -