ஹதீஸ்கள்
#477
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும், தமது கடைத்தெருவில் தொழு வதைவிடவும் ‘ஜமாஅத்துடன்’ (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்து ஐந்து (மடங்கு தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மை யாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத் துடன் பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஒரு தகுதியை அவருக்கு அல்லாஹ் உயர்த்து கிறான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகிறான். அவர் பள்ளிவாசலில் நுழைந்துவிட்டால், அவர் (கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்து தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்வரை அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில் தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும்வரை, அவருக் காக வானவர்கள் பிரார்த்தனை செய்கி றார்கள். ஆனால், (அங்கத் தூய்மையை அகற்றிவிடக்கூடிய) சிறுதுடக்கு அவருக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும். அப்போது வானவர்கள், “இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்குக் கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #477
- Book Index
- 125
Grades
- -