ஹதீஸ்கள்
#474
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் (மக்களுடன் வட்டமாக அமர்ந்து) இருந்தபோது, மூன்று பேர் (அவர்களை நோக்கி) வந்தனர். (அவர்களில்) இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். பிறகு அவ்விருவரில் ஒருவரோ வட்டமாக அமர்ந்திருந்த அந்த அவையில் ஓர் இடைவெளி இருப்பதைக் கண்டு அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ (வெட்கப் பட்டுக்கொண்டு) பின்னால் போய்விட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்: (சற்று முன்னர் வந்த) அந்த மூன்று பேரைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லட் டுமா? அவர்களில் ஒருவரோ, அல்லாஹ் வின் பக்கம் ஒதுங்கினார்; அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக்கொண்டான். மற்றொருவரோ வெட்கப்பட்டு (பின்னால் போய் உட்கார்ந்து)கொண்டார். எனவே, அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் (கருணைகாட்ட) வெட்கப்பட்டான். மூன்றாமவரோô (காரணமின்றி இந்த அவையை) அலட்சியப்படுத்தினார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சி யம் செய்துவிட்டான். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، ان ابا مرة، مولى عقيل بن ابي طالب اخبره عن ابي واقد الليثي، قال بينما رسول الله صلى الله عليه وسلم في المسجد فاقبل ثلاثة نفر، فاقبل اثنان الى رسول الله صلى الله عليه وسلم وذهب واحد، فاما احدهما فراى فرجة فجلس، واما الاخر فجلس خلفهم، فلما فرغ رسول الله صلى الله عليه وسلم قال " الا اخبركم عن الثلاثة اما احدهم فاوى الى الله، فاواه الله، واما الاخر فاستحيا، فاستحيا الله منه، واما الاخر فاعرض، فاعرض الله عنه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #474
- Book Index
- 122
Grades
- -
