ஹதீஸ்கள்
#473
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) உரையாற்றிக்கொண்டி ருக்கையில் அவர்களை நோக்கி ஒரு மனிதர் வந்து, “இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரண்டி ரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்; சுப்ஹு தொழுகை(யின் நேரம் நுழைந்து விட்டது) பற்றி நீங்கள் அஞ்சினால் (இறுதி யில்) வித்ருக்காக ஒரு ரக்அத் தொழுது கொள்ளுங்கள்! நீங்கள் தொழுது முடித்த வற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்” என்றார்கள்.54 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களைச் சப்தமிட்டு அழைத்து’ என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #473
- Book Index
- 121
Grades
- -