ஹதீஸ்கள்
#472
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்தபோது ஒரு மனிதர், “இரவுத் தொழுகை பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் நுழைந்து விட்டது) பற்றி அஞ்சினால் (இறுதியில்) ஒரு ரக்அத் தொழுதுகொள்ள வேண்டும். அவர் முன்னர் தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்” என்றார்கள். (இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்கள், “உங்களின் இறுதித் தொழுகையாக ‘வித்ரை’ ஆக்கிக்கொள்ளுங்கள்; ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே கட்டளை யிட்டார்கள்” என்று கூறுவார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #472
- Book Index
- 120
Grades
- -