ஹதீஸ்கள்
#470
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் நின்றுகொண்டிருந்தேன். அப்போது யாரோ ஒருவர் என்மீது சிறு கல்லை வீசினார். நான் (திரும்பிப்) பார்த்தபோது அங்கே (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். “நீர் சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வருவீராக” என்றார்கள். அவ்வாறே நான் அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் (அவ்விருவரிடமும்), ‘நீங்கள் யார்?’ அல்லது ‘நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ‘நாங்கள் தாயிஃப்வாசிகள்’ என்று பதிலளித்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “(நல்ல வேளை! நீங்கள் வெளியூர்க்காரர் களாய்ப் போய்விட்டீர்கள்) நீங்கள் இந்த (மதீனா) நகரைச் சேர்ந்தவர்களாயிருந் திருந்தால், நிச்சயமாக நான் உங்கள் இருவரையும் (சாட்டையால்) அடித்திருப் பேன்; (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாச-ல் நீங்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا يحيى بن سعيد، قال حدثنا الجعيد بن عبد الرحمن، قال حدثني يزيد بن خصيفة، عن السايب بن يزيد، قال كنت قايما في المسجد فحصبني رجل، فنظرت فاذا عمر بن الخطاب فقال اذهب فاتني بهذين. فجيته بهما. قال من انتما او من اين انتما قالا من اهل الطايف. قال لو كنتما من اهل البلد لاوجعتكما، ترفعان اصواتكما في مسجد رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #470
- Book Index
- 118
Grades
- -
