ஹதீஸ்கள்
#468
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொண்டு) மக்காவுக்கு வந்தபோது உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் (வந்து) இறையில்லம் கஅபாவின் கதவைத் திறந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களும், பிலால், உசாமா பின் ஸைத், உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டனர். அதில் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பிறகு அனைவரும் வெளியே வந்தனர். நான் விரைந்து வந்து பிலால் (ரலி) அவர்களிடம், (‘நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களா?’ என்று) கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “(ஆம்) அதனுள் தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள். “எ(ந்த இடத்)தில் தொழுதார்கள்?” என்று கேட்டதற்கு, ‘இரண்டு தூண்களுக்கிடையே’ என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது “எத்தனை ரக்அத்கள் தொழு தார்கள்?” என்று கேட்கத் தவறிவிட்டேன். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، وقتيبة، قالا حدثنا حماد، عن ايوب، عن نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم قدم مكة، فدعا عثمان بن طلحة، ففتح الباب، فدخل النبي صلى الله عليه وسلم وبلال واسامة بن زيد وعثمان بن طلحة، ثم اغلق الباب، فلبث فيه ساعة ثم خرجوا. قال ابن عمر فبدرت فسالت بلالا فقال صلى فيه. فقلت في اى قال بين الاسطوانتين. قال ابن عمر فذهب على ان اساله كم صلى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #468
- Book Index
- 116
Grades
- -
