ஹதீஸ்கள்
#458
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ‘ஒரு கறுப்பு ஆண்’ அல்லது ‘ஒரு கறுப்புப் பெண்’ இறந்துவிட்டார். (அவர் இறந்த செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாம-ருந்தது.) ஆகவே, அவரைப் பற்றி (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், “அவர் இறந்துவிட்டார்” எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித் திருக்கக் கூடாதா? ‘அவரது அடக்கத் தலத்தை’ அல்லது ‘அந்தப் பெண்மணி யின் அடக்கத் தலத்தை’ எனக்குக் காட்டுங்கள்” என்று கூறிவிட்டு, அவரது அடக்கத் தலத்திற்குச் சென்று அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #458
- Book Index
- 106
Grades
- -