ஹதீஸ்கள்
#453
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பள்ளிவாசலுக்குள் கவி பாடுவதை உமர் (ரலி) அவர்கள் கண்டித்தபோது கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களி டம், “அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்: (என்னிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் (ஆகிய என்) சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிதைகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானை ‘ரூஹுல் குதுஸ்’ (தூய ஆத்மா வானவர் ‘ஜிப்ரீல்’) மூலம் பலப்படுத்துவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர் களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித் தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #453
- Book Index
- 102
Grades
- -