ஹதீஸ்கள்
#450
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலை (அதன் பழைய அமைப்பை மாற்றி விரிவுபடுத்தி)க் கட்ட விரும்பியபோது, அவர்களைப் பற்றி மக்கள் (குறை) பேசினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கிவிட்டீர்கள். ‘யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அதைப் போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் அல்அஷஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் அன்பை நாடி (யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ)” என்று (நபியவர்கள்) கூறியதாகவே நான் கருதுகிறேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #450
- Book Index
- 99
Grades
- -