ஹதீஸ்கள்
#446
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் ‘மஸ்ஜிதுந் நபவீ’ பள்ளிவாசல் (உடைய சுவர்கள்) செங்கற் களால் கட்டப்பட்டிருந்தன; அதன் மேற் கூரை பேரீச்சமர ஓலைகளாலும், அதன் தூண்கள் பேரீச்ச மரக் கட்டைகளாலும் அமைந்திருந்தன. அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை. என்றாலும், உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அதை விரிவுபடுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தி-ருந்த கட்டட அமைப்பிலேயே செங்கல், பேரீச்ச மர ஓலை ஆகியவற்றால் அதைக் கட்டினார்கள். அதன் தூண்களை முன்பு போன்றே (பேரீச்சமரக்) கட்டைகளால் அமைத்தார்கள். பின்னர் (ஆட்சிப் பொறுப்பேற்ற) உஸ்மான் (ரலி) அவர்கள் அதில் மாற்றம் செய்து, அதிகமான அம்சங்களைச் சேர்த்தார்கள். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். தேக்கு மரத்தால் அதற்கு மேற்கூரை அமைத்தார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا يعقوب بن ابراهيم بن سعد، قال حدثني ابي، عن صالح بن كيسان، قال حدثنا نافع، ان عبد الله، اخبره ان المسجد كان على عهد رسول الله صلى الله عليه وسلم مبنيا باللبن، وسقفه الجريد، وعمده خشب النخل، فلم يزد فيه ابو بكر شييا، وزاد فيه عمر وبناه على بنيانه في عهد رسول الله صلى الله عليه وسلم باللبن والجريد، واعاد عمده خشبا، ثم غيره عثمان، فزاد فيه زيادة كثيرة، وبنى جداره بالحجارة المنقوشة والقصة، وجعل عمده من حجارة منقوشة، وسقفه بالساج
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #446
- Book Index
- 95
Grades
- -
