ஹதீஸ்கள்
#443
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பயணத்தை முடித்துக்கொண்டு) பள்ளிவாச-ல் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), “(பயணத்தி-ருந்து திரும்பிய நீர்) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று சொன்னார்கள். எனக்கு நபி (ஸல்) அவர்கள் தர வேண்டிய கடன் (பாக்கி) ஒன்றும் இருந்தது. அப்போது அவர்கள் அதை எனக்கு வழங்கியதுடன், மேலதிகமாகவும் வழங்கினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த) முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள், ‘முற்பகல் நேரத்தில் (நான் நபிகளாரிடம் சென்றேன்)’ என்று (ஜாபிர் (ரலி) அவர்கள்) கூறியதாகவும் குறிப்பிட்டார்கள் என நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #443
- Book Index
- 92
Grades
- -