ஹதீஸ்கள்
#442
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: திண்ணைத் தோழர்களில் எழுபது பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர் களில் ஒருவருக்குக்கூட மேல்துண்டு இருந்ததில்லை. (ஒரேயோர் ஆடைதான் அவர்களுக்கு இருந்தது.) ஒன்று அது கீழங்கியாக இருக்கும்; அல்லது (அது) ஒரு துணியாக (மட்டும்) இருக்கும். அதை அவர்கள் தங்கள் பிடரியில் முடிந்து கொண்டிருப்பார்கள். அவற்றில் சில, (பற்றாக் குறையால்) கணைக்கால்களின் பாதியளவே இருக்கும். இன்னும் சில கணுக்கால்களை எட்டு மளவுக்கு இருக்கும். அதை அவர்கள் (தொழும்போதும் மற்ற நேரங்களிலும்) தமது கரத்தால் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். மறைக்க வேண்டிய தம் உறுப்புகளை பிறர் பார்த்துவிடக் கூடாதே! என்பதற்காக (அவ்வாறு சேர்த்துப் பிடித்தனர்.) அத்தியாயம் :
حدثنا يوسف بن عيسى، قال حدثنا ابن فضيل، عن ابيه، عن ابي حازم، عن ابي هريرة، قال رايت سبعين من اصحاب الصفة، ما منهم رجل عليه رداء، اما ازار واما كساء، قد ربطوا في اعناقهم، فمنها ما يبلغ نصف الساقين، ومنها ما يبلغ الكعبين، فيجمعه بيده، كراهية ان ترى عورته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #442
- Book Index
- 91
Grades
- -
