ஹதீஸ்கள்
#428
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (புலம்பெயர்ந்து) மதீனாவுக்கு வந்தபோது, மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் ‘பனூ அம்ர் பின் அவ்ஃப்’ என்றழைக்கப்பட்டுவந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களி டையே பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு ‘பனூ நஜ்ஜார்’ கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள். ‘பனூ நஜ்ஜார்’ கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாகத் தம்) வாட்களைத் தொங்கவிட்டபடி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, ‘பனூ நஜ்ஜார்’ கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்களின் ஊர்தி ஒட்டகம் அபூஅய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கியது.- அப்போதெல்லாம் தொழுகை நேரம் தம்மை வந்தடையும் இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்று வார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள்- பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி பணித்தார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு ஆளனுப்பி னார்கள். (அவர்கள் வந்தபோது), “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்” என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர். நான் உங்களிடம் கூறப்போகின்றவை தான் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணைவைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சில பேரீச்ச மரங்களும் அதில் இருந்தன. எனவே, (அங்கு பள்ளிவாசல் கட்டுவதற்கு வசதியாக) நபி (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் (அங்கிருந்த) இணைவைப்பாளர்களின் சமாதிகள் தோண்டப்பட்டு, இடிபாடுகள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்பட்டன. பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன. பின்னர் பள்ளிவாச-ன் கிப்லா திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாச-ன் (கதவின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். ‘ரஜ்ஸ்’ எனும் ஈரசைச்சீர் வகைப் பாடலை பாடிக்கொண்டே அந்தக் கல்லை எடுத்துவரலாயினர். “இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே, (மறுமையின் நன்மைகளுக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அவர்களுடன் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) இருந்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #428
- Book Index
- 78
Grades
- -