ஹதீஸ்கள்
#404
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை ஐந்து ரக்அத்களா கத் தொழு(வித்)துவிட்டார்கள். (தொழுகை முடிந்து திரும்பியமர்ந்த நபியவர்களை நோக்கி) மக்கள், “தொழுகையில் (அதன் ரக்அத்கள்) கூடுதலாக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வாறு (வினவுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள். மக்கள், “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழு(வித்)தீர்கள் (அதனால்தான் வினவினோம்.)” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில் அமர்வதைப் போன்று) தம் கால்களை மடக்கி (கிப்லாவை நோக்கித் திரும்பி மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، عن شعبة، عن الحكم، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال صلى النبي صلى الله عليه وسلم الظهر خمسا فقالوا ازيد في الصلاة قال " وما ذاك ". قالوا صليت خمسا. فثنى رجليه وسجد سجدتين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #404
- Book Index
- 56
Grades
- -
