ஹதீஸ்கள்
#402
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மூன்று விஷயங்களில் நான் என் இறைவனுக்கு இசைவான கருத்து கொண்டேன்: 1. நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடத்தைத் தொழுமிடமாக நாம் ஆக்கிக்கொள்ளலாமே!” என்று கேட்டேன். அப்போது, “இப்ராஹீம் நின்ற இடத்தைத் தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்” (2:125) எனும் இறை வசனம் அருளப்பெற்றது.29 2. பர்தா குறித்த இறைவசனமும் (என் கருத்துக்கு இசைவாகவே அருளப் பெற்றது.) : நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவி யரை பர்தா அணியும்படி தாங்கள் கட்டளையிடலாமே! ஏனெனில், அவர் களுடன் நல்லவரும் கெட்டவரும் (எல்லா வகை மனிதர்களும்) உரையாடலாம்” என்று சொன்னேன். அப்போது பர்தா குறித்த இறைவசனம் அருளப்பெற்றது. 3. (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் ஒன்று சேர்ந்து, நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்துகொண்டனர். அப்போது நான் அவர்களிடம், “இறைத் தூதர் உங்களை மணவிலக்குச் செய்து விட்டால், உங்களை விடச் சிறந்த துணைவியரை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கலாம்” என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறே) இந்த இறைவசனம் (66:5) அருளப்பெற்றது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #402
- Book Index
- 53
Grades
- -