ஹதீஸ்கள்
#397
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றி நாளில்) இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இதோ அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற் குள் நுழைந்துவிட்டார்கள்” என்று சொல்லப்பட்டது. (பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள் ளிருந்து) வெளியே வந்துகொண்டிருந்த போது நான் அங்கு சென்றேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவின் இரு நிலைக்கால்களுக்கிடையே நின்றுகொண்டி ருப்பதைக் கண்டேன். உடனே நான் பிலால் (ரலி) அவர்களிடம், “கஅபாவிற் குள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; நீங்கள் கஅபாவிற்குள் நுழையும்போது இடப் பக்கமிருக்கின்ற இரு தூண்களுக்கு மத்தியில் இரண்டு ரக்அத்கள் தொழுதார் கள்; பிறகு வெளியே வந்து கஅபாவின் கதவை முன்னோக்கியபடி இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #397
- Book Index
- 48
Grades
- -