ஹதீஸ்கள்
#392
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் (உறுதி) கூறும் வரை அவர்களுடன் போரிட வேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே, இதை அவர்கள் கூறி, நாம் தொழுவதைப் போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதை அவர்கள் புசிப்பார்களேயானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர் மற்றும் உடைமைகள் (மீது கைவைப்பது) நம்மீது தடை செய்யப்பட்டதாகிவிடும்; மேலும், (இரகசியமாகக் குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا نعيم، قال حدثنا ابن المبارك، عن حميد الطويل، عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " امرت ان اقاتل الناس حتى يقولوا لا اله الا الله. فاذا قالوها وصلوا صلاتنا، واستقبلوا قبلتنا، وذبحوا ذبيحتنا، فقد حرمت علينا دماوهم واموالهم الا بحقها، وحسابهم على الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #392
- Book Index
- 44
Grades
- -
