ஹதீஸ்கள்
#389
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அபூவாயில் (ஷகீக் பின் சலமா- ரஹ்) அவர்கள் கூறியதாவது: தமது (தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாகச் செய்யாத ஒருவரைக் கண்ட ஹுதைஃபா (பின் அல்யமான் -ர-) அவர்கள், அவர் தொழுது முடித்தபோது, “நீர் (உரிய முறையில்) தொழவில்லை” என்று கூறி னார்கள். மேலும் அவர்கள், “(இதே நிலையில்) நீர் இறந்துவிட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்தவராகவே இறப்பீர்” என்று சொன்ன தாகவும் நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :
اخبرنا الصلت بن محمد، اخبرنا مهدي، عن واصل، عن ابي وايل، عن حذيفة، راى رجلا لا يتم ركوعه ولا سجوده، فلما قضى صلاته قال له حذيفة ما صليت قال واحسبه قال لو مت مت على غير سنة محمد صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #389
- Book Index
- 41
Grades
- -
