ஹதீஸ்கள்
#387
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்; (கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக் கையால் தடவி) தம் காலுறைகள்மீது ‘மஸ்ஹு’ செய்தார்கள். பிறகு அவர்கள் (காலுறைகளுடனேயே) எழுந்து தொழு வதை நான் கண்டேன். அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட் டது. அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக் கிறேன்” என்று பதிலளித்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (“காலுறைகளின் மீது ‘மஸ்ஹு’ செய்து தொழலாம்” என்ற கருத்துடைய அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்கள் உள்ளிட்ட) மக்களுக்கு, (ஜரீர் (ரலி) அவர்களின்) இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளிப்பதாய் அமைந்தது. ஏனெனில், ஜரீர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) கடைசியாக இஸ்லாத்தைத் தழுவியவர் ஆவார். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #387
- Book Index
- 39
Grades
- -