ஹதீஸ்கள்
#380
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (தாய்வழிப்) பாட்டி முளைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதளவு சாப்பிட்டுவிட்டுப் பின்னர், “எழுங்கள். உங்களுக்காக நான் (கூடுதலான தொழுகையைத்) தொழுவிக் கிறேன்” என்று கூறினார்கள். (தொழுவதற் காக) எங்களுக்குரிய பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி நான் எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்டதால் கறுப்பேறி இருந் தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழு கைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்றுகொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று கூடுதலான) இரண்டு ரக்அத்கள் எங்களுக்குத் தொழவைத்து விட்டு, (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #380
- Book Index
- 32
Grades
- -