ஹதீஸ்கள்
#376
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ-ர-) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது ‘அப்தஹ்’ எனுமிடத் தில்) தோ-னாலான சிவப்பு நிற கூடார மொன்றில் (தங்கியிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (‘உளூ’) செய்துவிட்டு மீதிவைத்த தண்ணீரை பிலால் (ரலி) அவர்கள் எடுத்துவருவதைக் கண்டேன். மேலும், அந்த எஞ்சிய தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக்கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர், அதை(த் தமது மேனியில்) தடவிக்கொண்டார். அந்தத் தண்ணீரில் சிறிதளவும் கிடைக்கப்பெறாதவர், அடுத்தவரின் கையில் இருந்த ஈரத்தைத் தொட்டுக்கொண்டார். பிறகு பிலால் (ரலி) அவர்கள் ஒரு (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை எடுத்து வந்து அதை ஊன்றுவதை நான் கண்டேன். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேலங்கியை (தமது கணைக்கால்கள் தெரியுமளவுக்கு) உயர்த்திப் பிடித்தபடி வெளியில் வந்து (தடுப்பாக வைக்கப்பட்டிருந்த) அந்தக் கைத்தடியை நோக்கி மக்களுடன் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால்நடைகளும் கடந்து செல்வதை நான் பார்த்தேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #376
- Book Index
- 28
Grades
- -