ஹதீஸ்கள்
#366
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இஹ்ராம் கட்டியவர் (முழு நீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அணியமாட்டார்; முக்காடுள்ள மேலங்கி அணியமாட்டார்; குங்குமப் பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணியமாட்டார். (காலுறைகள் அணியமாட்டார்.) காலணிகள் கிடைக்காதவர், காலுறைகள் அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால்களுக்கு கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.13 இதை சாலிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர் களிடமிருந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
حدثنا عاصم بن علي، قال حدثنا ابن ابي ذيب، عن الزهري، عن سالم، عن ابن عمر، قال سال رجل رسول الله صلى الله عليه وسلم فقال ما يلبس المحرم فقال " لا يلبس القميص ولا السراويل ولا البرنس ولا ثوبا مسه الزعفران ولا ورس، فمن لم يجد النعلين فليلبس الخفين وليقطعهما حتى يكونا اسفل من الكعبين ". وعن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم مثله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #366
- Book Index
- 18
Grades
- -
