ஹதீஸ்கள்
#365
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, ஓரே ஆடையை அணிந்துகொண்டு தொழுவது பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒவ்வொருவரும் இரு ஆடைகள் வைத்துள்ளனரா?” என்று கேட்டார்கள். பின்னர் ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தில் இது பற்றிக்) கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு (ஆடைகளைத்) தாராளமாக வழங்கியிருந்தால் நீங்களும் தாராளமாக அணிந்துகொள்ளுங்கள். (அதாவது:) - ஒருவர் தம் ஆடை (வகை)கள் அனைத்தையும் அணிந்து தொழலாம்; - மற்றொருவர் கீழங்கியும் மேல் துண்டும் அணிந்து தொழலாம்; - மற்றொருவர் கீழங்கியும் (முழுநீளச்) சட்டையும் அணிந்து தொழலாம்; - மற்றொருவர் கீழங்கியும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழலாம்; - மற்றொருவர் முழுக்கால் சட்டையும் மேல்துண்டும் அணிந்து தொழலாம்; - மற்றொருவர் முழுக்கால் சட்டையும் (முழுநீளச்) சட்டையும் அணிந்து தொழலாம்; - மற்றொருவர் முழுக்கால் சட்டையும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழலாம்; - மற்றொருவர் அரைக்கால் சட்டையும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழலாம்; - மற்றொருவர் அரைக்கால் சட்டையும் (முழு நீளச்) சட்டையும் அணிந்து தொழலாம்; (இறுதியாக) உமர் (ரலி) அவர்கள் “அரைக்கால் சட்டையும் (விசாலமான) மேல்துண்டும் அணிந்து தொழலாம்” என்று கூறியதாக நான் எண்ணுகிறேன்.12 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #365
- Book Index
- 17
Grades
- -