ஹதீஸ்கள்
#364
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபியவர்களின் காலத்தில் குறைஷி யரால் இறையில்லம் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டபோது) அவர்களுடன் (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கஅபாவிற்காகக் கற் களை(ச் சுமந்து) எடுத்து வந்துகொண்டி ருந்தார்கள். அப்போது நபியவர்கள்மீது கீழங்கி (மட்டுமே) இருந்தது. அவர்களு டைய பெரிய தந்தை அப்பாஸ் அவர்கள் (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களிடம், “என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் கீழங்கியை அவிழ்த்துத் தோள்மீது (வைத்துள்ள) கல்லுக்குக் கீழே வைத்து (கற்களைச் சுமந்து)கொண்டு வரலாமே!” என்று கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தமது கீழங்கியை அவிழ்த்துத் தம் தோள்கள்மீது வைத்தார்கள். உடனே மூர்ச்சையடைந்து கீழே விழுந்துவிட்டார்கள். அதற்குப்பின் நபி (ஸல்) அவர்கள் (ஒருபோதும்) பிறந்த மேனியுடன் காணப்பட்டதில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #364
- Book Index
- 16
Grades
- -