ஹதீஸ்கள்
#363
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள், “முஃகீராவே! தண்ணீர்ப் பாத்திரத்தை எடுங்கள்” என்றார்கள். நான் அதை எடுத்துக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் நடந்து (கண்ணுக்கெட்டாத தூரம்) சென்று என்னைவிட்டு மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் (இறைமறுப்பாளர் கள் நெய்த) ஷாம் (சிரியா) நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள். (அங்கத் தூய்மை செய்வதற்காக) அதன் கை பகுதியி-ருந்து தமது கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கைப் பகுதி குறுகலாக இருந்ததால் தமது கையை அதன் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள். நான் (அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக) அவர்க(ளின் உறுப்பு)கள்மீது தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். (இறுதியில் கால்களைக் கழுவுவதற்குப் பதிலாகக் கால்களில் அணிந்திருந்த) தமது காலுறைகள்மீது ஈரக் கையால் தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு தொழுதார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #363
- Book Index
- 15
Grades
- -