ஹதீஸ்கள்
#361
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
சயீத் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், ஒரே ஆடை அணிந்துகொண்டு தொழுவது பற்றிக் கேட்டோம். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் நான் அவர்களுடன் சென்றேன். ஒரு (நாள்) இரவு எனது தேவையொன்றுக்காக நான் (அவர்களிடம்) சென்றபோது நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கக் கண்டேன். அப்போது என்மீது ஒரே ஆடை மட்டுமே இருந்தது. அதை நான் என் உடல் முழுதும் போர்த்திக்கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று தொழுதேன். அவர்கள் தொழுது முடித்ததும் “என்ன, இரவு நேரத்தில் வந்திருக்கிறீர், ஜாபிரே?” என்று கேட்டார்கள். அப்போது நான் எனது நோக்கத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நான் சொல்-முடித்ததும், “என்ன இப்படி (கைகள்கூட வெளியே தெரியாமல்) போர்த்திக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். நான் ஆடை சிறியது (அதனால் இப்படிப் போர்த்தியுள்ளேன்)” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆடை விசாலமானதாக இருந்தால், அதை (கீழேயும் தோள்மீதும்) சுற்றிக் கொள்ளுங்கள்; ஆடை சிறியதாக இருந் தால் அதை இடுப்பில் (வேட்டியாக) அணிந்துகொள்ளுங்கள்” என்று கூறி னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #361
- Book Index
- 13
Grades
- -