ஹதீஸ்கள்
#352
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் (ரலி) அவர்கள் (ஒரு முறை) ஒரே கீழாடையை அணிந்துகொண்டு, அதைத் தமது பிடரியின் பக்கமாக முடிச்சுப்போட்டுக்கொண்டவர்களாகத் தொழுதார்கள். அப்போது அவர்களின் (மற்ற) ஆடைகள் துணி மாட்டும் பலகையில் வைக்கப்பட்டிருந்தன. அவர்களிடம் ஒருவர், “ஒரே கீழாடையிலா தொழுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “உம்மைப் போன்ற விவரமில்லாதவர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நான் செய்தேன்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்களது காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரு ஆடைகள் இருந்தன?” என்று வினவினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #352
- Book Index
- 4
Grades
- -