ஹதீஸ்கள்
#351
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள் ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களை யும் (தொழுகைத் திடலுக்கு) புறப்படச் செய்யுமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். “பெண்கள் அனைவரும் முஸ்-ம்களின் கூட்டுத் தொழுகையிலும் பிரார்த்தனை யிலும் கலந்துகொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் மற்றப் பெண்கள் தொழும் இடத்தி-ருந்து விலகியிருக்க வேண்டும்” (என்று நபி (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருத்தியிடம் துப்பட்டா இல்லாவிட்டால் என்ன செய்வது)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒரு பெண்ணிடம் துப்பட்டா இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தன் துப்பட்டாக்களில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்!” என்றார்கள்.8 இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا يزيد بن ابراهيم، عن محمد، عن ام عطية، قالت امرنا ان نخرج، الحيض يوم العيدين وذوات الخدور، فيشهدن جماعة المسلمين ودعوتهم، ويعتزل الحيض عن مصلاهن. قالت امراة يا رسول الله، احدانا ليس لها جلباب. قال " لتلبسها صاحبتها من جلبابها ". وقال عبد الله بن رجاء حدثنا عمران، حدثنا محمد بن سيرين، حدثتنا ام عطية، سمعت النبي صلى الله عليه وسلم بهذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #351
- Book Index
- 3
Grades
- -
