ஹதீஸ்கள்
#349
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (வந்து), என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ‘ஸம்ஸம்’ தண்ணீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார். பிறகு (பழையபடியே நெஞ்சை) மூடிவிட்டார். பிறகு என் கையைப் பிடித்து (என்னை அழைத்து)க்கொண்டு விண்ணில் ஏறினார். முதலாவது வானத்திற்கு நான் சென்றபோது அந்த வானத்தின் காவலரிடம், ‘திறங்கள்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார். அதற்கு அவர், “யார் அது?” எனக் கேட்டார். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். அதற்கு அவர், “உங்களுடன் யாரேனும் உள்ளார்களா?” எனக் கேட்டார். அவர், “ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார் கள்” என்று பதிலளித்தார். அதற்கு அவர், “(அவரை அழைத்துவரச் சொல்-) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘ஆம்’ என்று கூறினார். (முதல் வானத்தின் கதவை) அவர் திறந்தபோது, நாங்கள் அந்த வானத்தின் மேலே (இன்னும்) சென்றோம். அங்கு ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு என்னைப் பார்த்து,) “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று (வாழ்த்துக்) கூறினார். நான் ஜிப்ரீல் அவர்களிடம், “இவர் யார்?” எனக் கேட்டேன். ஜிப்ரீல் அவர்கள், “இவர்தான் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அவருடைய சந்ததிகள். அவர்களில் வலப் பக்கம் இருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருக்கும் மக்கள் நரகவாசிகள். ஆகவேதான், இவர் வலப் பக்கம் பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்; இடப் பக்கம் பார்க்கும் போது (வேதனைப்பட்டு) அழுகிறார்” என்று பதிலளித்தார். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் இரண்டாம் வானத்திற்கு ஏறிச் சென்றார். அதன் காவலரிடம் ‘திறங்கள்’ என்று கூறினார். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் பதிலளித்தபின்) அவர் கதவைத் திறந்தார். அனஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள், வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர, அவர்கள் தங்கியிருந்த இடங்கள் எங்கெங்கே அமைந்திருந்தன என்பது பற்றி அவர்கள் (என்னிடம்) குறிப்பிட்டுக் கூறவில்லை. எனினும், நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்.4 அனஸ் (ரலி) அவர்கள் மேலும் கூறுகிறார்கள்: “என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் (வாழ்த்துக்) கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், “இவர்தான் இத்ரீஸ்” என்று பதிலளித்தார். பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும், “நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜீப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்தான் மூசா” என்று பதிலளித்தார். பின்னர் நான் (அந்தப் பயணத்தில்) ஈசா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும் “நல்ல சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக!” என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜிப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், “இவர்தான் ஈசா” என்று பதிலளித்தார். பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், “நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்தான் இப்ராஹீம்” என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்-ம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்அன்சாரி (ரலி) ஆகியோர் கூறி வந்ததாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத்- ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு (இன்னும்) மேலே என்னை அழைத் துச் செல்லப்பட்டது. நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, (வானவர்கள் விதிகளைப் பதிவு செய்யும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவி யுற்றேன். இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது (நான் உட்பட) என் சமுதாயத்தார் அனைவர்மீதும் (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா (அலை) அவர்களைக் கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், “உங்கள்மீது உங்கள் சமுதாயத்தாருக்காக அல்லாஹ் என்ன கடமையாக்கினான்?” என்று கேட்டார்கள். நான், “(என் சமுதாயத்தார்மீது) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்” என்று பதிலளித்தேன். அவர்கள், “அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று சற்று குறைத்துக் கடமையாக்கும்படி சொ)ல்லுங்கள் ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதைத் தாங்க முடியாது” என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கேட்டபோது) இறைவன் ஐம்பதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்களிடம் நான் திரும்பிச்சென்று, “அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்துவிட்டான்” என்று சொன்னேன். அப்போதும் அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள் (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்). ஏனெனில், இதையும் உங்கள் சமுதாயத்தாரால் தாங்க முடியாது” என்று சொன்னார்கள். அவ்வாறே, நானும் (இறைவனிடம்) திரும்பினேன். அவன் அவற்றில் இன்னொரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்களிடம் வந்தபோது, “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங் கள். இதையும் உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள்” என்றார்கள். இவ் வாறாக நான் திரும்பிச் சென்று (இறுதியில்) “இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும். (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழு கைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்தச் சொல் (இனி) மாற்றப்படாது” என்று அல்லாஹ் கூறிவிட்டான். பின்னர் நான் மூசா (அலை) அவர்களி டம் திரும்பிச் சென்றேன். அவர்கள், “(மீண்டும்) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்றார்கள். நான், “என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்” என்று சொன்னேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) ‘சித்ரத்துல் முன்தஹா’வுக்குச் சென்றார்கள். இனம் புரியாத பல வண்ணங்கள் அதைப் போர்த்தியிருந்தன. பிறகு நான் சொர்க்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கு முத்தாலான கழுத்தணிகளைக் கண்டேன். சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #349
- Book Index
- 1
Grades
- -