ஹதீஸ்கள்
#339
ஸஹீஹ் அல்-புகாரீ - Rubbing hands and feet with dust (Tayammum)
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் இங்கே இடம்பெறுகிறது. மேலும், அறிவிப்பாளர்களில் ஒருவ ரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் தம்மிரு கைகளால் தரையில் அடித்து அவ்விரு கைகளையும் தம் வாயருகே கொண்டுசென்று (ஊதிவிட்டுப்) பின்னர் தமது முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவி(க்காட்டி) னார்கள் என்பதும் இந்த அறிவிப்பில் கூடுதலாக இடம்பெறுகிறது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “தூய்மையான மண் ஒரு முஸ்லிம் அங்கத் தூய்மை செய்வதற்கான பொருளாகும். தண்ணீர் இல்லாதபோது அதுவே அவருக்குப் போதும்” என அம்மார் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا حجاج، قال اخبرنا شعبة، اخبرني الحكم، عن ذر، عن سعيد بن عبد الرحمن بن ابزى، عن ابيه، قال عمار بهذا، وضرب شعبة بيديه الارض، ثم ادناهما من فيه، ثم مسح وجهه وكفيه. وقال النضر اخبرنا شعبة عن الحكم قال سمعت ذرا يقول عن ابن عبد الرحمن بن ابزى قال الحكم وقد سمعته من ابن عبد الرحمن عن ابيه قال قال عمار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Rubbing hands and feet with dust (Tayammum)
- Hadith Index
- #339
- Book Index
- 6
Grades
- -
