ஹதீஸ்கள்
#323
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் படுத்திருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே (அதிலிருந்து) நழுவி(ச் சென்று), மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தமக் கருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன். அத்தியாயம் :
حدثنا معاذ بن فضالة، قال حدثنا هشام، عن يحيى، عن ابي سلمة، عن زينب ابنة ابي سلمة، عن ام سلمة، قالت بينا انا مع النبي، صلى الله عليه وسلم مضطجعة في خميلة حضت، فانسللت فاخذت ثياب حيضتي فقال " انفست ". فقلت نعم. فدعاني فاضطجعت معه في الخميلة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #323
- Book Index
- 28
Grades
- -
