ஹதீஸ்கள்
#322
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. உடனே நான் அதிலிருந்து மெல்ல நழுவி(ச் சென்று), மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுத்து அணிந்துகொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ஆயினும், அவர்கள் என்னை அழைத்து, அந்தப் போர்வைக்குள் என்னை நுழைத்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடு வார்கள். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தி-ருந்து (தண்ணீர் அள்ளி) பெருந்துடக்கின் குளியலை நிறைவேற்றுவோம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #322
- Book Index
- 27
Grades
- -