ஹதீஸ்கள்
#317
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: துல்ஹஜ் மாதப் பிறை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் (மதீனாவி-ருந்து) நாங்கள் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்துகொள்ளலாம். ஏனெனில், குர்பானிப் பிராணியை நான் கொண்டுவராமல் இருந்திருந்தால் கட்டாயம் நானும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருப்பேன்” என்று கூறினார்கள். அப்போது சிலர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக் காக இஹ்ராம் கட்டினர். நான் உம்ரா விற்காக இஹ்ராம் கட்டியவர்களில் ஒருவளாய் இருந்தேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (எனவே, என்னால் முத-ல் எண்ணி யிருந்த உம்ராவைச் செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ரா செய்வதை விட்டுவிடு; உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக்கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்” என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன். ‘அல்ஹஸ்பா’ (முஹஸ்ஸப்) எனும் இடத்தில் நாங்கள் தங்கியிருந்த இரவில் (உம்ரா செய்வதற்காக) என்னுடன் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். (அவருடன்) நான் ‘தன்ஈம்’ என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று, விட்டுப்போன எனது உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் கட்டினேன். ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மூவகை இஹ்ராம் முறைகளான தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய) இந்த முறைகள் எதிலும் (பரிகாரமாக) குர்பானி கொடுப்பதோ நோன்பு நோற்பதோ தானதர்மங்கள் செய்வதோ இருக்க வில்லை.6 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #317
- Book Index
- 22
Grades
- -