ஹதீஸ்கள்
#315
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிப் பெண்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “மாதவிடாயி -ருந்து (தூய்மையாகிக்கொள்ள) நான் எவ்வாறு குளிக்க வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் நறுமணம் தோய்க்கப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து, ‘மூன்று முறை சுத்தம் செய்’ என்றோ அல்லது ‘அதன் மூலம் சுத்தம் செய்’ என்றோ சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே நான் அந்தப் பெண்மணியைப் பிடித்து (என் பக்கம்) இழுத்து, நபி (ஸல்) அவர்கள் சொல்ல வருவதை அவருக்கு விளக்கிச் சொன்னேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #315
- Book Index
- 20
Grades
- -