ஹதீஸ்கள்
#293
ஸஹீஹ் அல்-புகாரீ - Bathing (Ghusl)
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தம் மனைவி யுடன் தாம்பத்திய உறவு கொண்டார்; ஆனால், விந்தை வெளியேற்றவில்லை (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனைவியின் பிறவி உறுப்பைத் தொட்ட தமது உறுப்பை அவர் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அங்கத் தூய்மை செய்துகொண்டு தொழலாம்” என்று சொன்னார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்: (பாலுறுப்புகள் சந்தித்துவிட்டால்) குளியல்தான் (மார்க்கத்தில்) தார்மிகக் கடமையாகும். இதுதான் இறுதிக் கட்டளையாகும். இதில் கருத்து வேறுபாடு இருப்பதால்தான் இங்கு குறிப்பிட்டோம்.10 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن هشام بن عروة، قال اخبرني ابي قال، اخبرني ابو ايوب، قال اخبرني ابى بن كعب، انه قال يا رسول الله اذا جامع الرجل المراة فلم ينزل قال " يغسل ما مس المراة منه، ثم يتوضا ويصلي ". قال ابو عبد الله الغسل احوط، وذاك الاخر، وانما بينا لاختلافهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Bathing (Ghusl)
- Hadith Index
- #293
- Book Index
- 45
Grades
- -
