ஹதீஸ்கள்
#278
ஸஹீஹ் அல்-புகாரீ - Bathing (Ghusl)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே வெறும் மேனியுடன் குளிப்பது வழக்கம். (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். இதனால் “அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா குட-றக்க நோயாளியாய் இருப்பதால்தான் அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை” என பனூ இஸ்ராயீல் சமூகத்தார் (குறை) கூறினார்கள். ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிக்கப் போனார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை(க் கழற்றி) ஒரு கல்-ன் மீது வைத்தார்கள். அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அதைப் பின்தொடர்ந்து, “கல்லே எனது துணி! கல்லே எனது துணி!” என்று குரல் எழுப்பி(யபடி ஓடி)னார்கள். (ஆடையில்லா கோலத்துடன் பனூ இஸ்ராயீல் சமுதாயம் குளித்துக் கொண்டிருந்த பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது) பனூ இஸ்ராயீல் சமுதாயத் தார் மூசா (அலை) அவர்களை (வெறும் மேனியுடன்) பார்த்துவிட்டு, “அல்லாஹ் வின் மீதாணையாக! மூசாவிற்கு எந்தக் குறையும் இல்லை” என்று கூறினர். இதன் அறிவிப்பாளரான அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதானையாக! மூசா (அலை) அவர்கள் (தமது கையி-ருந்த தடியால்) கல்லின் மீது அடித்த காரணத்தால் ‘ஆறு’ அல்லது ‘ஏழு’ தழும்பு கள் அந்தக் கல்-ல் பதிந்துவிட்டன. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Bathing (Ghusl)
- Hadith Index
- #278
- Book Index
- 30
Grades
- -