ஹதீஸ்கள்
#274
ஸஹீஹ் அல்-புகாரீ - Bathing (Ghusl)
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: பெருந்துடக்கி(ன் கடமையான குளிப்பி)ற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் (வாங்கி) வைத்துக்கொண்டு, தமது வலக் கையால் (தண்ணீரை அள்ளி) தமது இடக் கையின் மீது ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ ஊற்றி(க் கழுவி)னார்கள். பிறகு மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது கையை ‘தரையில்’ அல்லது ‘சுவரில்’ தேய்த்து ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ (தண்ணீர் விட்டுக்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். மேலும், தமது முகத்தையும் (முழங்கை வரை) இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலைக்குத் தண்ணீர் ஊற்றி னார்கள். பிறகு உடலின் மற்றப் பகுதி களைக் கழுவினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம் இரு கால்களையும் கழுவினார்கள். நான் (துடைப்பதற்காக) அவர்களிடம் துண்டு ஒன்றைக் கொடுத் தேன். ஆனால், அதை அவர்கள் விரும்பாமல் தமது கையால் தண்ணீரை (வழித்து) உதறலானார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Bathing (Ghusl)
- Hadith Index
- #274
- Book Index
- 26
Grades
- -