ஹதீஸ்கள்
#268
ஸஹீஹ் அல்-புகாரீ - Bathing (Ghusl)
கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இரவில், அல்லது பக-ல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்றுவிட்டு வந்துவிடுவார்கள். (அப்போது) அவர்களுக்குப் பதினொன்று துணைவியர் இருந்தனர்” என்று கூறினார்கள். உடனே நான், “அதற்கு நபி (ஸல்) அவர்கள் சக்தி பெற்றிருந்தார்களா?” என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேரின் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் பேசிக்கொள்வோம்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சயீத் (ரஹ்) அவர்கள் கத்தாதா (ரஹ்) அவர்களி டமிருந்து அறிவித்துள்ள தொடரில், “(அப்போது) நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، قال حدثنا معاذ بن هشام، قال حدثني ابي، عن قتادة، قال حدثنا انس بن مالك، قال كان النبي صلى الله عليه وسلم يدور على نسايه في الساعة الواحدة من الليل والنهار، وهن احدى عشرة. قال قلت لانس اوكان يطيقه قال كنا نتحدث انه اعطي قوة ثلاثين. وقال سعيد عن قتادة ان انسا حدثهم تسع نسوة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Bathing (Ghusl)
- Hadith Index
- #268
- Book Index
- 21
Grades
- -
