ஹதீஸ்கள்
#252
ஸஹீஹ் அல்-புகாரீ - Bathing (Ghusl)
அபூஜஅஃபர் (முஹம்மத் பின் அலீ அல்பாக்கிர்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறுசிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் குளியல் பற்றிக் கேட்டோம். “ஒரு ‘ஸாஉ’ தண்ணீர் போதும்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது” என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “உன்னைவிட அதிக முடியுள்ளவரும் உன்னைவிடச் சிறந்தவரு (மான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு)க்கு அந்த அளவுத் தண்ணீர் போதுமானதாக இருந்தது” எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا يحيى بن ادم، قال حدثنا زهير، عن ابي اسحاق، قال حدثنا ابو جعفر، انه كان عند جابر بن عبد الله هو وابوه، وعنده قوم فسالوه عن الغسل،. فقال يكفيك صاع. فقال رجل ما يكفيني. فقال جابر كان يكفي من هو اوفى منك شعرا، وخير منك، ثم امنا في ثوب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Bathing (Ghusl)
- Hadith Index
- #252
- Book Index
- 5
Grades
- -
